Thursday, September 20, 2012

நாவலம் -- குண்டில் இயக்கம் பாடத்திட்டம்



குண்டில் இயக்கம் பாடத்திட்டம்



"புசுண்டரை சந்தித்தே ஆக வேண்டும்" சித்தத்தை நிலைபெறச் செய்ய முயலும் செம்மாந்தன் நெஞ்சுச் சக்கரம் அதிர ஆரம்பித்தது


குண்டில் என்ற முதுகுத் தண்டில் இயங்கும் இயக்க சக்தியை அறிந்த் ஆயும் செம்மாந்தன்.

குண்டி என்ற அடிப்பகுதியை முறையாக அமர்த்தி, உள்ளே நிலைபெற்றுள்ள இயக்கத்தினை கிளர்த்தி குண்டில் என்ற முதுகுத் தண்டில் செலுத்தி இயக்கும் புதிய ஆய்வு முறை இது.. மத்தி உரைக்கும் அவையில் ஆதி சித்தனால் அறிமுகப்படுத்தப்பட்டு பாடத்திட்டமாய் நிலைபெறும் முன் சோதனை செய்யப்படும் புதிய முறை இது..

செம்மாந்தன் நெஞ்சுக் சக்கரம் அதிர்ந்தது.. இது புது அனுபவம் . இவ்வொலி காதில் கேட்கவில்லை. நேரே நெஞ்சின் ஒலியாய் கேட்டது....

வெப்பம் என்பது ஆற்றலின் ஒரு வகையாய் உணரப்பட்டிருந்தது . வெப்பம் உருவாக்கும் அமைப்பாய் குண்டி என்ற அமரும் இடத்தை வைத்து முதலாம் நிலையையும் தொப்பூழ் கொடி நிலையையும் மாந்தன் கடந்திருந்தான். தான் முறையாய்ச் செய்ய ஆசனாய் காக்கைப் பாடினியார் செய்ய பணித்திருந்தவற்றை முறையாகச் செய்திருந்தான். இரண்டு வருடங்களில் இந்நிலையை அடைந்திருந்தான். அவனது அக உணர்வுநிலைகளைக் குறித்து வைத்திருந்தான்.

இன்று முதன் முறையாய் மூன்றாம் நிலையை அடைந்திருந்தான்.

"அணுவைப் பிளந்தேழ் கடலைப் புகுத்து..."

குண்டில் இயக்கும் அதிர ஆரம்பித்தது. "புசுண்டரை சந்தித்தே ஆக வேண்டும்"

மாந்தனுக்கு தெளிவானது மூல ஒலியின் அதிர்வானது "அணுவைப் பிள..." என்றதிர விளைவொலியானது "புசுண்டரைச் சந்தி" என்றது

இருஅக ஒலிகளும் ஒன்றை ஒன்று விஞ்சும் மூயற்சியில் மன ஒருமை குலைய குண்டில் இயக்கம் கிளர்தல் அடியை அடைந்தது.

குருதி ஓட்டம் தடைப்பட்டதால் மாந்தனால் உடனே எழ இயலவில்லை.

காக்கைப் பாடினியாரை உடனே சந்திக்க வேண்டும்.. மனதின் விரைவுக்கு உடல் ஈடு கொடுக்க வில்லை .அப்படியே அமர்ந்திருந்தான்.. குண்டிலியக்கத்தின் மேலோட்டமான பயிற்சிகளே தனக்கு தரப்படுவதை உணர்ந்திருந்தான். இம்முறைகள் இன்னமும் மத்துரை தமிழ் அவை(தமிழ்ச்சங்கத்தில்) ஒப்பு அளிக்கப் பெறாத்தினால் ஆசிரியை எளிய முறைகளையே பயிற்சி அளித்திருந்தார்..

அணுவைப் பிளத்தல் என்ற சொற்றொடர் இதுவரைக் கேள்விப்படாத ஒன்று. புசுண்டர் என்பதும் கேள்விப்படாத ஒன்று.

ஏதோஒரு சுழலில் தான் கருவியாவதை மனம் அறிய மாந்தன் எழுந்தான்..

-----------------------------------------------------

மத்தி உரை-- தயிரை மத்தால் கடைவது போல் ஆய்ந்து பல சான்றுகளுடன் கற்றதை உரைக்கும் ஆய்வுரை.. இது பிற்காலத்தில் மத்துரை என்று மாறி மதுரை எனத் திரிந்தது. இவ்வுரை நிகழும் இடம் மூதறிஞர்களால் நடத்தப் பெற்று அவை எனவும் பின்னாளில் சங்கம் (சங்கின் ஒலி போன்று தெளிவாய் அறிஞர் முழங்கும் இடம்) எனப் பெயர் பெற்றது..


No comments:

Post a Comment