Thursday, September 20, 2012

நாவலம்


எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எனக்குள் என் மொழியைக் குறித்த பெருமை இருந்து வருகிறது. நாளுக்கு நாள் அது வலுத்து வருகிறது.எம் நிகழ்காலச் சிறுமை என்னை அச்சுறுத்துகிறது. எம் பெருமை பழம் பெரும் பெருமை. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடிப் பெருமை அது. நாவலந்தேயத்தே தென் மதுரையிலும், கபாடபுரத்திலும் பல்துளியாற்றங்கரையிலும் பொருநை ஆற்றங்கரையிலும் உலவிய என் கனவுகளுக்கு வரி வடிவ ம் கொடுக்க வேண்டும் என்பது என் தமிழ் அன்னைக்கு நான் செய்யும் பணி. வரலாற்று ஆதாரங்களால் அல்லாது செம்மொழியின் ஆதாரங்களால் என் கற்பனையை ஓட்டும் முயற்சி இது. பிழைகள் இருக்கலாம் ஆனால் என் தமிழ்க் குடிப் பெருமையை,என் மொழிக் காதலை,எனது நிகழ்கால வலிவின்மையின் அங்கலாய்ப்பை நான் பதிவு செய்தே ஆகவேண்டும்.. எங்கும் நிறைகின்ற எல்லாம் வல்ல இறையைப் பணிந்து கற்றவர் அடிதொழுது பரிகிறேன்.... நாவலம்.......

No comments:

Post a Comment