Wednesday, June 30, 2021

பாவம் நிலக்கடலை

யாருமில்லாத
திண்ணைப்பாட்டிக்கு
நிலக்கடலை தந்தால்
கதை சொல்லுவாள்.

பாவம் செய்தவர்கள்
நிலக்கடலைகள் ஆக
சபிக்கப்படுவார்கள் என
திண்ணைப்பாட்டி கதை 
சொல்லி இருக்கிறாள்

மூச்சுத் திணற
மண்ணில் புதைக்கவும்
நீராவியில்
வேக வைக்கவும்
தோலை உரித்து
எரிய எரிய
மிளகாய்தூவி
எண்ணையில் வறுத்தும்
சுடுமணலில் புரட்டியும்
செக்கில் ஆட்டியும்
தண்டனை தருவார்கள்
என கதை
சொல்லுவாள்.

திண்ணைப்பாட்டியின் 
கொடுமைக்கார புருஷன்
கடலைக் காட்டில்
காணமல் போனதாக ஒரு
கதையும் இருக்கிறது.





No comments:

Post a Comment